Skip to main content

Shaliheen




உயிர் நண்பன் ஸாலிஹீனுக்காக....

சாமான்ய நண்பன் தனையும்
சாதனையாளனாய் மாற்றி மகிழும் 
சாகஸ வித்தைக் காரன்
ஸாலிகீன் எந்தன் சோதரனே...!

கல்லூரி வாழ்வினில் கழிந்த 
கலகலத்த தருணங்களை எண்ணி
கவலையுடன் நினைவு கூர்ந்து
கண்ணிமை நனைய வரைகின்றேன்...!

ஈரொம்பது வருஷ காலம்
இவ்வுலகில் நீ வாழ்ந்த காலம்
ஈசானி மூலை எங்கும்
இவன்பெயர் தலைத்து ஓங்கும்...!

அன்புக்கு அதிபதியே
அருமையான மானுடனே
அனைவரையும் கவர்ந்திழுத்த
அதிரடி எழுத்தாளனே...!

உன் புகழ்பாடி கவிவடிக்க
உலகில் சொற்களில்லை நான்பிடிக்க
வார்த்தைகள் அற்ற மகத்துவனாய்
வாழ்ந்து மடிந்தாய் வரலாற்றிலினிதாய்...!

கவிவடிக்க கற்றுக் கொடுத்த
கவிஞன் எந்தன் ஆசானே
கவிதை உனக்கும் வடிப்பேனென
கனவிலும் நான் நினையேனே...!

ஆற்றல் பலகொண்ட உன்னை
அவசரமாய் காணவே எண்ணி
ஆண்டவனும் நாட்டம் கொண்டே
அதிவேகமாய் அழைத்தான் போலும்...!

நண்பர்கள் நாங்கள் இன்று
நாதி இன்றி தவிக்கின்றோம்
நண்பனவன் மறுமை வாழ்க்கை
நலம் பெறவே துதிக்கின்றோம்....!!! 

( நண்பனின் சுவன வாழ்விற்காக அனைவரும் பிரார்த்திப்போமாக... ஆமீன் ஆமீன் )

                                  - sironmany -
                                    F M Rozaan

Comments

Popular posts from this blog

என் அருமை தந்தை

 என் அருமை தந்தை நாட்களும் அறுபதை தாண்டியதே நாளுமொரு கணமுமாய் ஓடியதே… நாயகனாம் எங்களது செல்லத்தந்தையின் நாமறிந்த கபுரு வாழ்வும் தொடங்கியதே…! சொர்க்கத்தின் வாசலிலொன்றும் மூடியதே சொந்தங்கள் கூடியின்று கலைந்தனரே… சொர்க்கத்துக்கு யாத்திரை போகவென்றே சொல்லாமலவர் நெடுந்தூரம் சென்றிடவே…! வானத்தையே சிறுசுகள் பார்க்குதப்பா வாரிசுகளோ நினைவுகளை தாங்குதப்பா… வாழ்வதற்கு வழிகாட்ட நீயுமற்ற வாழ்வுதனில் உனைதேடும் வதனமப்பா…! தங்கையவள் தனிமையாய் விண்ணையடைய தம்பியவன் அவருடன் சேர்ந்துபோக தாயவளும் இவர்களுடனே கூட்டுசேர தாமதமின்றி நீயும் துணை சென்றதேனோ…! நெஞ்சமும் கணகணத்து வெதும்புதப்பா கொஞ்சிப்பேச அருகில நீயும் இல்லையப்பா… கஞ்சியையும் குடிக்கவின்று தோணலப்பா மஞ்சம்கூட முள்ளாயின்று குத்துதப்பா…! அருளாளனும் பிழைபொறுக்க வேண்டுமப்பா அனைவர்க்கும் நல்லதையே நாடனுமப்பா அன்பான தாய்கூட மூவருமே அழகாக வாழனுமே சுவனத்திலே…! ஆமீன்  ஆமீன்  யாரப்பல் ஆலமீன்……..!!!                                           ...