Skip to main content

Posts

என் அருமை தந்தை

Recent posts

அருமைத்தாய்

 .         அருமைத்தாய் கருவினிலே என்னை சுமந்து  கரும் இரவுகள் கண்விழித்து.. கண்ணிமைபோல் காத்து நின்ற கலங்கரை விளக்கேயென் தாயே...! ஈரைந்து மாதங்கள் கர்ப்பத்தில் ஈருலகில் உன்மைந்தன் சிறந்திடவே.. கணவேளை கண்ணுறங்கா உனைவிட்டு கடல்கடந்து தொலைதேசம் சென்றேனே...! கணநொடிகள் வருஷங்களாய் கடந்ததுவே கடிகாரமுள்ளும் அவசரமாய் சுற்றியதே.. தலையினிலென் கருமுடியும் நரைத்ததுவே தலைமகனாய் நானுந்தன் அருகிலில்லையே...! சிரம் தாழ்த்தி தரம் உயர்ந்து இகம் போற்றிட வாழவென்றே.. மெழுகாக நீ உருகி அழகுற வழி வகுத்தாய்...! தலைமேலே உனை சுமந்து தரணி முழுதும் சுற்ற வேண்டும்.. தலைவைத்து  உன் மடியில் தலைகோதிட துயில வேண்டும்...! மீதமுள்ள என் ஆயுட்காலம் மீண்டும் உன்னால் சிறக்கவேண்டும்.. உயிர்பிரியும் வேளை வரை உன்பாதம் வணங்க வேண்டும்...!!!                               - sironmany -                                 F M Rozaan

😢😢நல்லடக்கம்.😢😢

 😢😢 நல்லடக்கம் 😢😢 நெருப்பினில் மனிதம் கருகுதய்யா நெஞ்சமும் நொறுங்கி சிதறுதய்யா... வஞ்சங்கள் கொண்ட மாந்தர்தம் வன்மங்கள் விண்ணையும் முட்டுதய்யா...! ஜனாஸாவும் பத்துகள் தாண்டுதய்யா ஜனநாயகம் பொந்தினுல் ஒளிந்ததைய்யா அரக்கனின் இனவாத அசுரப்பிடியால் அனைவரின் கண்முன்னே எரியுதய்யா...! புத்தனைத் துதியும் பெளத்தர்களாய் புன்னகை மலர பெருமை கொள்ளும்... புனிதமாம் இலங்கை திருநாட்டினுல் புரியாத புதிராயொரு எரியூட்டலய்யா...! தொழில்களில் முடக்கம் கண்டோமய்யா தொடரான இறுக்கம் கொண்டோமய்யா.. நகரும் துரோக நடத்தைகளால் நலிந்து துவண்டு வாழ்ந்தோமய்யா...! வாழ்வுகள் நெருக்கடி ஆனதய்யா வரம்புகள் மீறியே போகுதய்யா... வாழ்ந்திட வழியினை தேடியபடி வாடிய வதனமாயெங்கள் கோலமய்யா...! மண்ணறை எங்களை மறுக்கலைய்யா மரணமும் எங்களை வெறுக்கலைய்யா... மனித நேயமற்ற மனிதர்களால் மரணித்து புதைப்பதிலும் மாற்றமய்யா...!  நாட்டிற்குள் உரிமைகள் மீறலய்யா நாளாந்தம் கோசங்கள் ஒலிக்குதய்யா வாழ்வதற்கும் வழிகேடு எம்மவர்க்கு சாவதற்கும் சுடுகாடு தலையெழுத்து...! திருப்பங்கள் சற்றென வந்ததய்யா தினமழுத நெஞ்சமது நெகிழ்ந்ததய்யா... வாழ்வதற்கோர் பிடிமாணம...

SPB....

  * பாடும் நிலா பாலா*  பாசத்தோடு பார்த்து ரசித்த நேசத்தோடு நெகிழ்ந்து மகிழ்ந்த கோஷமெழ மக்களை வென்ற வேஷமற்ற சுப்பரமணி பாலாவே...! “ஆயிரம் நிலவே வா”வென அழகிய குரலால் அரங்கேறி ஆயிரம் ஆயிரம் கீதங்களை அசட்டையாய் பாடி முடித்தாயே நீ...! காதலை ரசத்துடன் பருகிடவே கடவுளை மனதினால் உணர்ந்திடவே தாயின் மடியினில் கரைந்திடவே தாரத்தை நெஞ்சார தாங்கிடவே...! நட்பினை நகைப்பின்றி மதித்திடவே நல்லவர் பெரியரை வணங்கிடவே பாட்டாளி மனமாற குளிர்ந்திடவே பாட்டெடுத்தெம்மை மயக்கினாயே நீ...!  உலகில் வாழும் ரசிகர்களின்றி உன் பிரிவால் துடித்தனரின்று உளமாற நவிலுகிறேன் இன்று உன்னுச்சம் தொட எவருண்டு இங்கு...!  பழகுவதற்கு ஓர்  உடன்பிறப்பாய் பண்புகளுக்கு ஓர் முன்மாதிரியாய்  பாடகனுக்கு மேலொரு பாசப்பிணைப்பை பாரினிலின்று இழந்து நிற்கின்றோம்...! உன் புகழின் உச்சம் இனி உருகாது இவ்வுலகில் நீ துணி உன்பாடலேயிங்கு பலரின் பணி இது SPBயின் கூட்டணி... 😢😪                                     -  sironmany -   ...

ZIYARATH

  !!!நண்பனே சில்மிஷங்கள் குடிகொண்ட சியாரத்தே சிதைந்துட்டோம் நாமுனது விபத்தாலே சிரமங்கள் உனக்கென கேள்வியுற்றோம் சிரிப்பின்றி நாதியற்று உருகி நின்றோம்..! விபத்துக்கள் இன்றிங்கு சாதாரணம் விதிமுறையை மீறுவோரின் அசட்டுத்தனம் விரைந்துட்டோம் வைத்தியசாலை உனைதேடி விறைத்துட்டோம் கட்டிலினில் மேலுனைக்கண்டு...! தலைமுறையாய் நீசெய்த நன்கொடைகள் தனயனுந்தன் தலையையின்று காத்ததுவே தவறுசெய்ய நீயென்றும் முனைந்ததில்லை தவறிக்கூட தப்பெதுவும் நினைந்ததில்லை...  உயிர்கொடுப்பான் தோழனென படித்ததுண்டு உண்மையான தோழமையை பார்த்ததுண்டு உன்னுடைய நண்பர்களை ஒன்று சேர்க்க (YBFல்) உயிரைக்கூட கொடுக்க இன்று முனைந்ததேனோ???!!!... நண்பர்கள் பலபேரைக் கண்டதுண்டு நட்புடன் அகமழிந்து சென்றதுண்டு நட்புக்கு இலக்கணமா உந்தனுடன் நண்பர்கள்நாம் எனக்கூற பெருமையடா.!                                           - sironmany -                                 ...

AZWAR

  தரமான தகைமையான  தன்னடக்கமான தன்னிலை மறவா  தன்னுடன் உள்ளோரை தறம் பிரித்து தறப்படுத்தி  தக்க வைக்கும் தன்னலமற்ற  தன்னாதிக்கமில்லா தனயன் எங்கள்  தனாதிகாரி  அஸ்வர் ஹூசைன் தரணி போற்ற வாழ்த்துகின்றேன்.                          - sironmany -                             F M Rozaan 

My best Friend ... SALIHEEN

உயிர் நண்பன் ஸாலிஹீனுக்காக.... சாமான்ய நண்பன் தனையும் சாதனையாளனாய் மாற்றி மகிழும்  சாகஸ வித்தைக் காரன் ஸாலிகீன் எந்தன் சோதரனே...! கல்லூரி வாழ்வினில் கழிந்த  கலகலத்த தருணங்களை எண்ணி கவலையுடன் நினைவு கூர்ந்து கண்ணிமை நனைய வரைகின்றேன்...! ஈரொம்பது வருஷ காலம் இவ்வுலகில் நீ வாழ்ந்த காலம் ஈசானி மூலை எங்கும் இவன்பெயர் தலைத்து ஓங்கும்...! அன்புக்கு அதிபதியே அருமையான மானுடனே அனைவரையும் கவர்ந்திழுத்த அதிரடி எழுத்தாளனே...! உன் புகழ்பாடி கவிவடிக்க உலகில் சொற்களில்லை நான்பிடிக்க வார்த்தைகள் அற்ற மகத்துவனாய் வாழ்ந்து மடிந்தாய் வரலாற்றிலினிதாய்...! கவிவடிக்க கற்றுக் கொடுத்த கவிஞன் எந்தன் ஆசானே கவிதை உனக்கும் வடிப்பேனென கனவிலும் நான் நினையேனே...! ஆற்றல் பலகொண்ட உன்னை அவசரமாய் காணவே எண்ணி ஆண்டவனும் நாட்டம் கொண்டே அதிவேகமாய் அழைத்தான் போலும்...! நண்பர்கள் நாங்கள் இன்று நாதி இன்றி தவிக்கின்றோம் நண்பனவன் மறுமை வாழ்க்கை நலம் பெறவே துதிக்கின்றோம்....!!!  ( நண்பனின் சுவன வாழ்விற்காக அனைவரும் பிரார்த்திப்போமாக... ஆமீன் ஆமீன் )                   ...