*பாடும் நிலா பாலா*
பாசத்தோடு பார்த்து ரசித்த
நேசத்தோடு நெகிழ்ந்து மகிழ்ந்த
கோஷமெழ மக்களை வென்ற
வேஷமற்ற சுப்பரமணி பாலாவே...!
“ஆயிரம் நிலவே வா”வென
அழகிய குரலால் அரங்கேறி
ஆயிரம் ஆயிரம் கீதங்களை
அசட்டையாய் பாடி முடித்தாயே நீ...!
காதலை ரசத்துடன் பருகிடவே
கடவுளை மனதினால் உணர்ந்திடவே
தாயின் மடியினில் கரைந்திடவே
தாரத்தை நெஞ்சார தாங்கிடவே...!
நட்பினை நகைப்பின்றி மதித்திடவே
நல்லவர் பெரியரை வணங்கிடவே
பாட்டாளி மனமாற குளிர்ந்திடவே
பாட்டெடுத்தெம்மை மயக்கினாயே நீ...!
உலகில் வாழும் ரசிகர்களின்றி
உன் பிரிவால் துடித்தனரின்று
உளமாற நவிலுகிறேன் இன்று
உன்னுச்சம் தொட எவருண்டு இங்கு...!
பழகுவதற்கு ஓர் உடன்பிறப்பாய்
பண்புகளுக்கு ஓர் முன்மாதிரியாய்
பாடகனுக்கு மேலொரு பாசப்பிணைப்பை
பாரினிலின்று இழந்து நிற்கின்றோம்...!
உன் புகழின் உச்சம் இனி
உருகாது இவ்வுலகில் நீ துணி
உன்பாடலேயிங்கு பலரின் பணி
இது SPBயின் கூட்டணி... 😢😪
- sironmany -
F M Rozaan

Comments
Post a Comment