Skip to main content

Posts

Showing posts from August, 2020

Br Riyas

துருக்கித் தொப்பி அணிந்த எம் துலாபர சிறுத்தை நீ.. துன்பப் படும் மக்கள் துயர் துடைக்க உதித்த மைந்தன் நீ...! உன்னைப்போற்ற என்கரத்தில் உண்மை ஒன்றே உண்டு உலகில் உள்ள யோக்கியரினுல் உன் பெயரும் உண்டு...!    பாட்டிசைக்கும்போது  JMA இன் நாகூர் ஹனீபா நீ... சிறுவர்மன்றம்தனிலே JMA இன் அலி பாபா நீ...! கறுப்புக் கண்ணாடி கொண்ட கர்ம வீரர் காமராசே... தாடி சில நீட்டம் கொண்ட தாஹூரின் தனயனே...!  உன்சேவை பல தொடர உண்மையாக பிரார்த்தித்து உளமாற நன்றி கூறி உவகையுடன் விடை பெறும்...                                                                                 - sironmany -                                        F M RozAan 

உடன் பிறவா சகோதரிக்காக...

Small dedication to Br Shameez மே மாதம் அவதரித்த மேன்மையான சகோதரியே.. மென்மையான உனையிழந்து மெழுகாக உருகுகின்றான்....!!! வாழ்ந்திடுவாய் நெடுங்காலமென வானளவு நினைத்திருந்தான் வாழ்நாள்தனை பாதியிலே வாழாதிங்கு மடிந்தாயே...!!! ஏங்கியதே எனது உள்ளம் மூல்கியதே கண்ணீரில் வெள்ளம் உடன் பிறவா சகோதரிக்காய் உளமாற நெருடுது நெஞ்சம்..!! எண்ணவில்லை கணமேனும் எழவுமில்லை துளியேனும் பாதியிலே அறுத்தெரிந்து பரலோகம் செல்வாயென...!!! உன்தம்பி இங்கிருக்க  உனக்காக வாழ்ந்திருக்க விண்ணுலக அழைப்பையேற்று விரைந்து விட்டாய் விடையேயின்றி...!! இவ்வுலகில் இறக்கும் மட்டும் உன்நினைவுகள் சமீஸை தட்டும் உன்போலொரு உடன்பிறப்பு எப்போதினி அவன் வாழ்வில் கிட்டும்!!                                              - sironmany -                                     F M RozAan                 ...

Dedicated to Br SHAMEEZ

செயலாளர் நாயகமே எங்கள் செயல்பாட்டு நாயகனே பலநாட்கள் உனைதேடி பலனின்றி வரைகின்றேன்.  நீயின்றி நாங்கள் இங்கு நிலைகுலைந்து தவிக்கின்றோம் நிஜமாக திரும்பி உந்தன் நிதர்சனத்தை ஏங்குகின்றோம்.  நாட்கள் பல கடந்துமின்னும் நாயகனின் செங்குரலை நாசுக்காயினும் மீண்டும் கேட்க நாயனேதான் நாட வேண்டும். கூட்டமாக ஒன்று சேர்ந்த கூட்டணியாம் ஜேயெம்மேயின் கூரிய வளர்ச்சி பற்றி கூடுதல் கவலை கொண்டீர்! நேசமுடன் நாமும் ஒன்றாய் நேரிய பாசத்துடனும் நேர்த்தியாக நடக்க வேண்டி நேரம் ஒதுக்கி பாடுபட்டீர். சாணக்கிய அனுகு முறையால் சாமர்த்திய முடிவுகளெடுத்து சாதாரண எங்களையும் சாவகாசமாக இயங்க வைத்தீர்.  மீண்டும் உந்தன் கூட்டணியில் மீழெழுந்து நாமும் செல்ல மிக விரைவில் நீயும் இங்கு  மீண்டு வர வேண்டி நிற்கும்.......                     JMA  TEAM 😢😢😢                           - sironmany -                            F M Rozaa...

ZANAS

அமுத எழில் கொண்ட  அழகு தேவதை ஆசிபாவே! அரபு நாட்டில் குடியிருக்கும்  அன்பர் ஷானாஸிடம் செல்லாயோ....    ஆருயிர் தோழனவன் மிக ஆதரவு தந் திடுவான் ஆளில்லா துயர்தனையே மனதார ஆற்றிடுவான்... கேட்போருக்கு இல்லையென்ற கேள்விக்கே இடமில்லையங்கு துணிச்சலுடன் உன்னருகே தோளோடு தோள் நிற்பான் ...  நீதிக்காய் குரல் கொடுக்கும்  நீதமான நண்பனவன் நெஞ்சினிலே சுமந்திடுவான் நேசமுற காத்திடுவான்...!!!                             - sironmany -                              F M Rozaan 

ASIFA

காமுகர் ஐவர் கையில் காயமே பட்டாள் எங்கள் ஆஸீபா என்னும் பெண்ணின் ஆத்மார்த்த கதையை கேளீர்... எட்டு தான் வயசு இன்று எட்டாக் கனியாய் ஆனாள்  தொட்டுத்தான் நாமும் பார்க்கா தொலைதூரம் தனியே போனாள்...  குதிரை தொலைந்ததை எண்ணி குமுறிக் குமுறி அவளும் தேட காட்டுக்குள் அழைத்துச்சென்றான் காதகன் வஞ்சகமாக... ஊருக்கு நாட்டாமை அவராம் அவரோட வாரிசுவுந்தான் மருமகனை யுடனழைத்து கூட்டாக சென்ற னராம்.... பச்சப் பிஞ்சு உள்ளம் பயத்தினில் வெம்பித்துடிக்க பட்டினியில் போட்டு அவளை பலபேரும் ஒன்றாய் மேய... நெஞ்சு துடிக்கு திங்கு பிஞ்சு பறக்க கணக்கு திங்கு அஞ்சலையின் அழுகையோலம் மஞ்சத்தையே வெறுக்கு திங்கு... போதையினை கொடுத் தவளை போதி மரத்திற் கடியில் வைத்து எண்ணி எட்டு நாள் கணக்காய் கோணியிலே அவளை சுத்தி.... பண்ணிய கொடுமை தனை பட்டியலிட்டால்,   முடியாது  பாவப்பட்ட பிஞ்சு நெஞ்சம் பாடுபட்ட துயரை எண்ணி ... ஓடி விடக் கூடாதென ஒற்றைக் காலையும் ஒடித்து விட்டு ஒன்றாக குழுமி அங்கு கலவிக் கொண்டாட்டமொன்று.... எட்டு வயசுச் சிறுமியடா ஏட்டுக்கல்வி தெரியாதடா ஏழைத்தாயின் ராணியடா எங்க குல வம்சமடா.... வஞ்சகன் காமப் பிடியில்...

INSULT

பாட்டெழுதி பரிசில் பெறும் பாடலாசிரியர் அவைதனிலே பாவெழுதி நிரூபிக்கவே பாமரனும் ஓடோடி வந்தேன்  பைத்தியக் காரனென்று லாவகமாய் கூறிவிட்டாய் பார்தனிலே இதுபோலொரு பரிகாசமேதுமுண்டோ!!!?                                    - sironmany -                                   F M Rozaan 

காதலிக்கோர் தூது...

தேவையெனில் தருகிறேன் செந்தமிழ்  தேன்கவித்துளிகள்தனை ஆர்வமுடன் இன்பமுற அள்ளித்தருகிறேன் அமுதகவிதனை கேட்போருக்கு இல்லையென  கேளாக்கொடுக்கும் வம்சமிவன் கேட்டவுடன் தருகின்றேன்  அங்கயர்க்கன்னி துயிலார....                                - sironmany -                                 F M Rozaan 

இளம் மனைவிக்கு பிரியாவிடை

நாம்  ஒரே வீட்டில்  வாசம் பழகியதோ பல மாசம் ஆதலால் ஏற்பட்டதோ இந்த பாசம் காட்ட முடியவில்லை  என்னால் றோசம் வெளிதேசம் செல்கிறேன் பல மாசம் காட்டிடாதே என்மேல மோசம் வாங்கி வருகிறேன் வாழ்வதற்கோர் வாசம் கொஞ்சம் கொடு எனக்கு சிறு அவகாசம்!!                                          - sironmany -                                         F M Rozaan 

SUJITH

இதயம் கணமாய் துடிக்குது இரத்தம் அணலாய் கொதிக்குது.. இறந்து போய் விட்டாயென்ற இரங்கல் செய்தி கேட்டதிலிருந்து...! சர்க்கார்களின் பொடு போக்குத்தனம் சமூகத்தாரின் அலட்சியக்குணம் சரித்திரம் படைக்கவேண்டிய நீ.. இன்று சந்திகளின் சுவரொட்டிகளில்....!!! சாக்ரடீஸ் போலொரு மேதையாவோ சாம்ராட் போலொரு வீரனாவோ சாதிக்க வேண்டும் என்றே சாமியிடம் வேண்டியிருப்பாள் உன் தாய்.. பெற்றவர்களும் நினைக்கவில்லை மற்றவர்களும் முனையவில்லை ஓட்டையாய் இருந்த குழியை கூட்டமாய் மூடி மறைக்க...! உலகிலேயே அதிகம் பாலர் உன்போல் பலர் மாண்டர் இங்கு உலகிற்கு  இன்று உந்தன் இறப்பு உணர்த்தட்டும் மற்றுமோர் காவியத்தை...!  மீண்டுமொரு பாலகன் கொலை மீளாமலிருக்கட்டும் இந்திய மண்ணில் மாற்றம் ஒன்றே மாற்று வழி... அரசை மாற்றிவிடும் மக்கள் மொழி...!                                   - sironmany -                                     F M Rozaan

மன்னவனுக்கு ஓர் ஓலை...!

காதலித்து மணமுடித்தேன்  காளை உன்னுடன் வாழ்ந்திடவே காலம் செய்த கோலத்தினால் காத்திருக்கும் கொடுமையின்று.... மாதம் பல உருண்டாலும் மன்னவன் நானுனை மறவேன்  மங்கையிவள் பலவேளை மல்லாக்காய் அழுகுகின்றேன்... விரைவினிலே ஒன்று சேர விண்ணை நோக்கி கரைகின்றேன் காத்திருக்கும் நேரமெல்லாம் கானல் நீராய் கரைந்தனவே!!! கோலம் பல நான் எடுப்பேன்  கோமகன் உனை மீட்டிடவே கொடுங்கோலன் செய்த சதி கொடுமையிலே வீழ்ந்து விட்டான்  பார்த்திருப்பேன் காலமெல்லாம்  பாவை மனம் வதை வதைக்க  பாரினிலே இதுபோலொரு பாவப்பட்ட ஜென்மமுன்டோ!!!                               - sironmany -                                F M Rozaan 

“THALA” RIYAS

எங்கட “தல” RIYAS

AMIREEN

Br KIYAS

SHIYAM

Br KIYAS

SHAMEEZ

செந்தமிழில் நடை மொழியும் செவ்வாழை இள நிறமும் செவ்வனே கடமை புரியும்  செங்குருதி கொண்டவனே! சென்றனவே சில காலம் காணவில்லை உன் கோலம் ஏனுமின்னும்  மாயாஜாலம் காட்டிடு உன் திருமுகக் கோலம்! செயலாளன் என்பது ஒன்றின் செயல்பாட்டினை வழிநடாத்தி  செம்மையாய் சீராய் அதனை செயல்கொள்ளும் கருமவீரன்..! நாமுமிங்கு  எதிர்பார்க்கும்  நாலாபுறமும் ஒன்றினையும்  நாளாம் அந்த விழா நாளில் நாயகனாய் நீதான் திகழ வேண்டும்! உன் மஞ்சம் பார்த்திருக்கும் நீ அமர காத்திருக்கும் புன்னகை பொழியும் உன்னுரையில் அரங்கமே அன்று அதிர வேண்டும்!   கவிதை பல இயம்ப இயலும்  கண்ணன் உந்தன் சிறப்பினை பாட கடமை என்னை அழைக்கின்றது  கண்ணியமாய் நவிலுகின்றேன்!                                - sironmany -                                F M Rozaan 

KISHOR