Skip to main content

SUJITH


இதயம் கணமாய் துடிக்குது
இரத்தம் அணலாய் கொதிக்குது..
இறந்து போய் விட்டாயென்ற
இரங்கல் செய்தி கேட்டதிலிருந்து...!

சர்க்கார்களின் பொடு போக்குத்தனம்
சமூகத்தாரின் அலட்சியக்குணம்
சரித்திரம் படைக்கவேண்டிய நீ.. இன்று
சந்திகளின் சுவரொட்டிகளில்....!!!

சாக்ரடீஸ் போலொரு மேதையாவோ
சாம்ராட் போலொரு வீரனாவோ
சாதிக்க வேண்டும் என்றே
சாமியிடம் வேண்டியிருப்பாள் உன் தாய்..

பெற்றவர்களும் நினைக்கவில்லை
மற்றவர்களும் முனையவில்லை
ஓட்டையாய் இருந்த குழியை
கூட்டமாய் மூடி மறைக்க...!

உலகிலேயே அதிகம் பாலர்
உன்போல் பலர் மாண்டர் இங்கு
உலகிற்கு  இன்று உந்தன் இறப்பு
உணர்த்தட்டும் மற்றுமோர் காவியத்தை...! 

மீண்டுமொரு பாலகன் கொலை
மீளாமலிருக்கட்டும் இந்திய மண்ணில்
மாற்றம் ஒன்றே மாற்று வழி... அரசை
மாற்றிவிடும் மக்கள் மொழி...!

                                  - sironmany -
                                    F M Rozaan

Comments

Popular posts from this blog

என் அருமை தந்தை

 என் அருமை தந்தை நாட்களும் அறுபதை தாண்டியதே நாளுமொரு கணமுமாய் ஓடியதே… நாயகனாம் எங்களது செல்லத்தந்தையின் நாமறிந்த கபுரு வாழ்வும் தொடங்கியதே…! சொர்க்கத்தின் வாசலிலொன்றும் மூடியதே சொந்தங்கள் கூடியின்று கலைந்தனரே… சொர்க்கத்துக்கு யாத்திரை போகவென்றே சொல்லாமலவர் நெடுந்தூரம் சென்றிடவே…! வானத்தையே சிறுசுகள் பார்க்குதப்பா வாரிசுகளோ நினைவுகளை தாங்குதப்பா… வாழ்வதற்கு வழிகாட்ட நீயுமற்ற வாழ்வுதனில் உனைதேடும் வதனமப்பா…! தங்கையவள் தனிமையாய் விண்ணையடைய தம்பியவன் அவருடன் சேர்ந்துபோக தாயவளும் இவர்களுடனே கூட்டுசேர தாமதமின்றி நீயும் துணை சென்றதேனோ…! நெஞ்சமும் கணகணத்து வெதும்புதப்பா கொஞ்சிப்பேச அருகில நீயும் இல்லையப்பா… கஞ்சியையும் குடிக்கவின்று தோணலப்பா மஞ்சம்கூட முள்ளாயின்று குத்துதப்பா…! அருளாளனும் பிழைபொறுக்க வேண்டுமப்பா அனைவர்க்கும் நல்லதையே நாடனுமப்பா அன்பான தாய்கூட மூவருமே அழகாக வாழனுமே சுவனத்திலே…! ஆமீன்  ஆமீன்  யாரப்பல் ஆலமீன்……..!!!                                           ...