!!!நண்பனே
சில்மிஷங்கள் குடிகொண்ட சியாரத்தே
சிதைந்துட்டோம் நாமுனது விபத்தாலே
சிரமங்கள் உனக்கென கேள்வியுற்றோம்
சிரிப்பின்றி நாதியற்று உருகி நின்றோம்..!
விபத்துக்கள் இன்றிங்கு சாதாரணம்
விதிமுறையை மீறுவோரின் அசட்டுத்தனம்
விரைந்துட்டோம் வைத்தியசாலை உனைதேடி
விறைத்துட்டோம் கட்டிலினில் மேலுனைக்கண்டு...!
தலைமுறையாய் நீசெய்த நன்கொடைகள்
தனயனுந்தன் தலையையின்று காத்ததுவே
தவறுசெய்ய நீயென்றும் முனைந்ததில்லை
தவறிக்கூட தப்பெதுவும் நினைந்ததில்லை...
உயிர்கொடுப்பான் தோழனென படித்ததுண்டு
உண்மையான தோழமையை பார்த்ததுண்டு
உன்னுடைய நண்பர்களை ஒன்று சேர்க்க (YBFல்)
உயிரைக்கூட கொடுக்க இன்று முனைந்ததேனோ???!!!...
நண்பர்கள் பலபேரைக் கண்டதுண்டு
நட்புடன் அகமழிந்து சென்றதுண்டு
நட்புக்கு இலக்கணமா உந்தனுடன்
நண்பர்கள்நாம் எனக்கூற பெருமையடா.!
- sironmany -
F M Rozaan

Comments
Post a Comment