Skip to main content

😢😢நல்லடக்கம்.😢😢


 😢😢 நல்லடக்கம் 😢😢


நெருப்பினில் மனிதம் கருகுதய்யா

நெஞ்சமும் நொறுங்கி சிதறுதய்யா...

வஞ்சங்கள் கொண்ட மாந்தர்தம்

வன்மங்கள் விண்ணையும் முட்டுதய்யா...!


ஜனாஸாவும் பத்துகள் தாண்டுதய்யா

ஜனநாயகம் பொந்தினுல் ஒளிந்ததைய்யா

அரக்கனின் இனவாத அசுரப்பிடியால்

அனைவரின் கண்முன்னே எரியுதய்யா...!


புத்தனைத் துதியும் பெளத்தர்களாய்

புன்னகை மலர பெருமை கொள்ளும்...

புனிதமாம் இலங்கை திருநாட்டினுல்

புரியாத புதிராயொரு எரியூட்டலய்யா...!


தொழில்களில் முடக்கம் கண்டோமய்யா

தொடரான இறுக்கம் கொண்டோமய்யா..

நகரும் துரோக நடத்தைகளால்

நலிந்து துவண்டு வாழ்ந்தோமய்யா...!


வாழ்வுகள் நெருக்கடி ஆனதய்யா

வரம்புகள் மீறியே போகுதய்யா...

வாழ்ந்திட வழியினை தேடியபடி

வாடிய வதனமாயெங்கள் கோலமய்யா...!


மண்ணறை எங்களை மறுக்கலைய்யா

மரணமும் எங்களை வெறுக்கலைய்யா...

மனித நேயமற்ற மனிதர்களால்

மரணித்து புதைப்பதிலும் மாற்றமய்யா...! 


நாட்டிற்குள் உரிமைகள் மீறலய்யா

நாளாந்தம் கோசங்கள் ஒலிக்குதய்யா

வாழ்வதற்கும் வழிகேடு எம்மவர்க்கு

சாவதற்கும் சுடுகாடு தலையெழுத்து...!


திருப்பங்கள் சற்றென வந்ததய்யா

தினமழுத நெஞ்சமது நெகிழ்ந்ததய்யா...

வாழ்வதற்கோர் பிடிமாணமாய் நற்செய்தி

வானலாவிய இறைவனிடம் அருள்நேசி...!



                                         - sironmany -

                                           F M Rozaan 


Comments

Popular posts from this blog

என் அருமை தந்தை

 என் அருமை தந்தை நாட்களும் அறுபதை தாண்டியதே நாளுமொரு கணமுமாய் ஓடியதே… நாயகனாம் எங்களது செல்லத்தந்தையின் நாமறிந்த கபுரு வாழ்வும் தொடங்கியதே…! சொர்க்கத்தின் வாசலிலொன்றும் மூடியதே சொந்தங்கள் கூடியின்று கலைந்தனரே… சொர்க்கத்துக்கு யாத்திரை போகவென்றே சொல்லாமலவர் நெடுந்தூரம் சென்றிடவே…! வானத்தையே சிறுசுகள் பார்க்குதப்பா வாரிசுகளோ நினைவுகளை தாங்குதப்பா… வாழ்வதற்கு வழிகாட்ட நீயுமற்ற வாழ்வுதனில் உனைதேடும் வதனமப்பா…! தங்கையவள் தனிமையாய் விண்ணையடைய தம்பியவன் அவருடன் சேர்ந்துபோக தாயவளும் இவர்களுடனே கூட்டுசேர தாமதமின்றி நீயும் துணை சென்றதேனோ…! நெஞ்சமும் கணகணத்து வெதும்புதப்பா கொஞ்சிப்பேச அருகில நீயும் இல்லையப்பா… கஞ்சியையும் குடிக்கவின்று தோணலப்பா மஞ்சம்கூட முள்ளாயின்று குத்துதப்பா…! அருளாளனும் பிழைபொறுக்க வேண்டுமப்பா அனைவர்க்கும் நல்லதையே நாடனுமப்பா அன்பான தாய்கூட மூவருமே அழகாக வாழனுமே சுவனத்திலே…! ஆமீன்  ஆமீன்  யாரப்பல் ஆலமீன்……..!!!                                           ...