Skip to main content

DILSANA

திகைக்க வைக்கும் பேரழகும்
திரும்ப வைக்கும் பொன்சிரிப்பும்
திமிருக் குணமே அறவேயற்ற
தில்சானா எங்கள்  சோதரியே...!

தானைத் தலைவரின் தலைமகளே
தாரமாம் நாஸிராவின் மரிக்கொழுந்தே...
தாங்கும் ஜேயெம்மேயின் கடிவாளமே
தாரணியே போற்றும் உன்சேவைதனையே

பழீல் மாமாவின் பவளவிளக்கே
பணிவுடன் கரையும் மதிப்பாளினியே
கிஷோர் மாமாவின்ற “கில்லி” நீயே
கிறங்கடிக்கும் பல்துறை பட்டதாரியே...!


உன்னைப் போற்றிப் பாடவென்றே
உவப்புடன் ஓடி வந்தேன் இன்றே..,
உலகில் உள்ள தமிழ் மொழியில்
உயரிய சொல்லை தேடித்தொலைந்தேன்!

நாளும்  ஓடித் தேடி
நானும் களைத்தேன் அகராதி முன்னாடி
பாராட்ட வார்த்தைகள் இன்றி
பார்த்து நின்றேன் கண்ணாடி பின்னாடி...!

உன் சேவை தொடரவேண்டும்
உன் தியாகம் போற்ற வேண்டும்
நீ கண்ட நாளைய சமூகம்
மிடுக்காய் உன்முன் மலர வேண்டும்...!

 அன்பான வாழ்த்துக்களுடன்...

                                        - sironmany -
                                          F M Rozaan

Comments

Popular posts from this blog

என் அருமை தந்தை

 என் அருமை தந்தை நாட்களும் அறுபதை தாண்டியதே நாளுமொரு கணமுமாய் ஓடியதே… நாயகனாம் எங்களது செல்லத்தந்தையின் நாமறிந்த கபுரு வாழ்வும் தொடங்கியதே…! சொர்க்கத்தின் வாசலிலொன்றும் மூடியதே சொந்தங்கள் கூடியின்று கலைந்தனரே… சொர்க்கத்துக்கு யாத்திரை போகவென்றே சொல்லாமலவர் நெடுந்தூரம் சென்றிடவே…! வானத்தையே சிறுசுகள் பார்க்குதப்பா வாரிசுகளோ நினைவுகளை தாங்குதப்பா… வாழ்வதற்கு வழிகாட்ட நீயுமற்ற வாழ்வுதனில் உனைதேடும் வதனமப்பா…! தங்கையவள் தனிமையாய் விண்ணையடைய தம்பியவன் அவருடன் சேர்ந்துபோக தாயவளும் இவர்களுடனே கூட்டுசேர தாமதமின்றி நீயும் துணை சென்றதேனோ…! நெஞ்சமும் கணகணத்து வெதும்புதப்பா கொஞ்சிப்பேச அருகில நீயும் இல்லையப்பா… கஞ்சியையும் குடிக்கவின்று தோணலப்பா மஞ்சம்கூட முள்ளாயின்று குத்துதப்பா…! அருளாளனும் பிழைபொறுக்க வேண்டுமப்பா அனைவர்க்கும் நல்லதையே நாடனுமப்பா அன்பான தாய்கூட மூவருமே அழகாக வாழனுமே சுவனத்திலே…! ஆமீன்  ஆமீன்  யாரப்பல் ஆலமீன்……..!!!                                           ...