Skip to main content

அன்பு நண்பன் ஆமிரீன்



செங்குருதி கொண்டோனே

செயல்பாட்டு நாயகனே

பலவருடம் உனைக் காணா

பரிதவிப்புடன் வரைகின்றேன்...!


நீயின்றி நானும் இங்கு

நிலைகுலைந்து தவிக்கின்றேன்

நிஜமாக திரும்பி உந்தன்

நிதர்சனத்தை ஏங்குகின்றேன்...!


நாட்கள் பல கடந்துமின்னும்

நாயகனின் வெண்முகத்தை

நாசுக்காக மீண்டும் நோக்க

நாயனேதான் நாட வேண்டும்...!


கூட்டமாக ஒன்று சேர்ந்த

கூட்டணியாம் *YBF* இன்

கூரிய வளர்ச்சி பற்றி

கூடுதல் கவலை கொண்டீர்...!


நேசமுடன் நாமும் ஒன்றாய்

நேரிய பாசத்துடன் இங்கு

நேர்த்தியாக நடக்க வேண்டி

நேரம் ஒதுக்கி பாடுபட்டீர்...!


சாணக்கிய அனுகு முறையால்

சாமர்த்திய தீர்வுகள் கூறி

சாதாரண எங்களையும்

சாவகாசமாக இயங்க வைத்தீர்...!


மீண்டும் நட்புக் கூட்டணியில்

மீழெழுந்து நாமும் செல்ல

மிக விரைவில் ஒன்றுகூடி

உண்டு மகிழ வேண்டி நிற்கும்.......!!!


                             உங்கள் அன்பின்

                               - sironmany -

                                F M Rozaan 

Comments

Popular posts from this blog

என் அருமை தந்தை

 என் அருமை தந்தை நாட்களும் அறுபதை தாண்டியதே நாளுமொரு கணமுமாய் ஓடியதே… நாயகனாம் எங்களது செல்லத்தந்தையின் நாமறிந்த கபுரு வாழ்வும் தொடங்கியதே…! சொர்க்கத்தின் வாசலிலொன்றும் மூடியதே சொந்தங்கள் கூடியின்று கலைந்தனரே… சொர்க்கத்துக்கு யாத்திரை போகவென்றே சொல்லாமலவர் நெடுந்தூரம் சென்றிடவே…! வானத்தையே சிறுசுகள் பார்க்குதப்பா வாரிசுகளோ நினைவுகளை தாங்குதப்பா… வாழ்வதற்கு வழிகாட்ட நீயுமற்ற வாழ்வுதனில் உனைதேடும் வதனமப்பா…! தங்கையவள் தனிமையாய் விண்ணையடைய தம்பியவன் அவருடன் சேர்ந்துபோக தாயவளும் இவர்களுடனே கூட்டுசேர தாமதமின்றி நீயும் துணை சென்றதேனோ…! நெஞ்சமும் கணகணத்து வெதும்புதப்பா கொஞ்சிப்பேச அருகில நீயும் இல்லையப்பா… கஞ்சியையும் குடிக்கவின்று தோணலப்பா மஞ்சம்கூட முள்ளாயின்று குத்துதப்பா…! அருளாளனும் பிழைபொறுக்க வேண்டுமப்பா அனைவர்க்கும் நல்லதையே நாடனுமப்பா அன்பான தாய்கூட மூவருமே அழகாக வாழனுமே சுவனத்திலே…! ஆமீன்  ஆமீன்  யாரப்பல் ஆலமீன்……..!!!                                           ...