Skip to main content

செயலாளன்

 

செந்தமிழில் நடை மொழியும்

செவ்வாழை இள நிறமும்

செவ்வனே கடமை புரியும் 

செங்குருதி கொண்டவனே!


சென்றனவே சில காலம்

காணவில்லை உன் கோலம்

ஏனுமின்னும்  மாயாஜாலம்

காட்டிடு உன் திருமுகக் கோலம்!


செயலாளன் என்பது ஒன்றின்

செயல்பாட்டினை வழிநடாத்தி 

செம்மையாய் சீராய் அதனை

செயல்கொள்ளும் கருமவீரன்..!


நாமுமிங்கு  எதிர்பார்க்கும் 

நாலாபுறமும் ஒன்றினையும் 

நாளாம் அந்த விழா நாளில்

நாயகனாய் நீதான் திகழ வேண்டும்!


உன் மஞ்சம் பார்த்திருக்கும்

நீ அமர காத்திருக்கும்

புன்னகை பொழியும் உன்னுரையில்

அரங்கமே அதிர வேண்டும்!

 

கவிதை பல இயம்ப இயலும் 

கண்ணன் உந்தன் சிறப்பினை பாட

கடமை என்னை அழைக்கின்றது 

கண்ணியமாய் நவிலுகின்றேன்!


                      - sironmany -

                       F M Rozaan 

Comments

Popular posts from this blog

என் அருமை தந்தை

 என் அருமை தந்தை நாட்களும் அறுபதை தாண்டியதே நாளுமொரு கணமுமாய் ஓடியதே… நாயகனாம் எங்களது செல்லத்தந்தையின் நாமறிந்த கபுரு வாழ்வும் தொடங்கியதே…! சொர்க்கத்தின் வாசலிலொன்றும் மூடியதே சொந்தங்கள் கூடியின்று கலைந்தனரே… சொர்க்கத்துக்கு யாத்திரை போகவென்றே சொல்லாமலவர் நெடுந்தூரம் சென்றிடவே…! வானத்தையே சிறுசுகள் பார்க்குதப்பா வாரிசுகளோ நினைவுகளை தாங்குதப்பா… வாழ்வதற்கு வழிகாட்ட நீயுமற்ற வாழ்வுதனில் உனைதேடும் வதனமப்பா…! தங்கையவள் தனிமையாய் விண்ணையடைய தம்பியவன் அவருடன் சேர்ந்துபோக தாயவளும் இவர்களுடனே கூட்டுசேர தாமதமின்றி நீயும் துணை சென்றதேனோ…! நெஞ்சமும் கணகணத்து வெதும்புதப்பா கொஞ்சிப்பேச அருகில நீயும் இல்லையப்பா… கஞ்சியையும் குடிக்கவின்று தோணலப்பா மஞ்சம்கூட முள்ளாயின்று குத்துதப்பா…! அருளாளனும் பிழைபொறுக்க வேண்டுமப்பா அனைவர்க்கும் நல்லதையே நாடனுமப்பா அன்பான தாய்கூட மூவருமே அழகாக வாழனுமே சுவனத்திலே…! ஆமீன்  ஆமீன்  யாரப்பல் ஆலமீன்……..!!!                                           ...