Skip to main content

பளீல் நாநா

 

அன்புக்கு அதிபதியே

அருமையான மானுடனே

அனைவரையும் கவரந்திழுத்த

அறிவிப்பாளன் யாழ் பழீலே!


அருஞ் சொல்லால் பல குரலில்

அசத்திய மக்கள் பேச்சாளனே

அருமையான தமிழ்நடை மொழியில்

அள்ளி உதிர்த்த பெட்டகமே! 


எங்கள் அமைப்பின் நாயகனே

எம்தலைவரின் மாணிக்கமே

எங்களை என்றும் அசரவிடாது

எழுப்பி  விடும் சிநேகிதனே!


உன்மேல் என்றும் பாசம் கொண்டு

உயிருக்குயிராய் பந்தம் கொண்டு

உரிமையாய் தருவாயென கனவு கண்டு

உண்மையாய் இருந்தேன்  விழித்துக் 

                                                கொண்டு


ஏமாற்றி விட்டாய் நம்பிய என்னை

ஏளன மாக்கினாய் மெய்யான அன்பை

ஏரெடுத்தும் பாராமல் என்னை

எள்ளி நகை ஆடிவிட்டாய் தூய நட்பை..!


அற்பத்தொகை ஏழு காசு

அதிகமில்லை தர முடியாதிருக்க

அநியாயத்திற்கெனை  நீயே இங்கு 

அசிங்கப்பட வைத்து விட்டாய்..! 


பாருலகம் உள்ள வரை 

பழீல் நாநாவை நான் மறவேன்

பளிக்கும் ஜேயெம்மே ஜெக்கட்டுக்காக

பழைய பலியை தீர்த்துவிட்டார்..!  


                             - sironmany -

                               F M Rozaan 

Comments

Popular posts from this blog

என் அருமை தந்தை

 என் அருமை தந்தை நாட்களும் அறுபதை தாண்டியதே நாளுமொரு கணமுமாய் ஓடியதே… நாயகனாம் எங்களது செல்லத்தந்தையின் நாமறிந்த கபுரு வாழ்வும் தொடங்கியதே…! சொர்க்கத்தின் வாசலிலொன்றும் மூடியதே சொந்தங்கள் கூடியின்று கலைந்தனரே… சொர்க்கத்துக்கு யாத்திரை போகவென்றே சொல்லாமலவர் நெடுந்தூரம் சென்றிடவே…! வானத்தையே சிறுசுகள் பார்க்குதப்பா வாரிசுகளோ நினைவுகளை தாங்குதப்பா… வாழ்வதற்கு வழிகாட்ட நீயுமற்ற வாழ்வுதனில் உனைதேடும் வதனமப்பா…! தங்கையவள் தனிமையாய் விண்ணையடைய தம்பியவன் அவருடன் சேர்ந்துபோக தாயவளும் இவர்களுடனே கூட்டுசேர தாமதமின்றி நீயும் துணை சென்றதேனோ…! நெஞ்சமும் கணகணத்து வெதும்புதப்பா கொஞ்சிப்பேச அருகில நீயும் இல்லையப்பா… கஞ்சியையும் குடிக்கவின்று தோணலப்பா மஞ்சம்கூட முள்ளாயின்று குத்துதப்பா…! அருளாளனும் பிழைபொறுக்க வேண்டுமப்பா அனைவர்க்கும் நல்லதையே நாடனுமப்பா அன்பான தாய்கூட மூவருமே அழகாக வாழனுமே சுவனத்திலே…! ஆமீன்  ஆமீன்  யாரப்பல் ஆலமீன்……..!!!                                           ...