Skip to main content

GIAS NANA


 

தலைமைக்கே ஒரு கம்பீரமாய்

தன்னிகரற்ற நற்செயல் புரிந்து

தனக்கே ஒரு பாணி அமைத்து 

தற்செயலினால் கூட ஏதேனும் 

தப்புகள் சிறு நடந்திராத வண்ணம்

தனியே நின்று சீரமைத்து

தம்தோழர் நம்மவர் அனைவர்தனையும்

தம்தோள்மேல் கணம் பாரா சுமந்த 

எங்கள் கண்ணியமும் கெளரவமுடைய 

எங்களனைவர் அன்பும் பாசமும் உடைய 

எமதமைப்பின் மதிப்புக்குரிய தலைவரே...!!!

எங்கள் உடன்பிறவாத உயிர்நரம்பே...!!!

தங்கள் பயணம் நன்றே இனதே

உங்கள் மனம் போல் சிறப்புடனமைய

கடவுள் ஆசி என்றென்றும் நல்க

அமைப்புடன் சேர்ந்து அடியேன் நானும்

மனதார வாழ்த்தி விடைபெறும் 

உங்கள அன்பின்.......

    

                                      - sironmany -

                                        F M Rozaan 


Comments

Popular posts from this blog

என் அருமை தந்தை

 என் அருமை தந்தை நாட்களும் அறுபதை தாண்டியதே நாளுமொரு கணமுமாய் ஓடியதே… நாயகனாம் எங்களது செல்லத்தந்தையின் நாமறிந்த கபுரு வாழ்வும் தொடங்கியதே…! சொர்க்கத்தின் வாசலிலொன்றும் மூடியதே சொந்தங்கள் கூடியின்று கலைந்தனரே… சொர்க்கத்துக்கு யாத்திரை போகவென்றே சொல்லாமலவர் நெடுந்தூரம் சென்றிடவே…! வானத்தையே சிறுசுகள் பார்க்குதப்பா வாரிசுகளோ நினைவுகளை தாங்குதப்பா… வாழ்வதற்கு வழிகாட்ட நீயுமற்ற வாழ்வுதனில் உனைதேடும் வதனமப்பா…! தங்கையவள் தனிமையாய் விண்ணையடைய தம்பியவன் அவருடன் சேர்ந்துபோக தாயவளும் இவர்களுடனே கூட்டுசேர தாமதமின்றி நீயும் துணை சென்றதேனோ…! நெஞ்சமும் கணகணத்து வெதும்புதப்பா கொஞ்சிப்பேச அருகில நீயும் இல்லையப்பா… கஞ்சியையும் குடிக்கவின்று தோணலப்பா மஞ்சம்கூட முள்ளாயின்று குத்துதப்பா…! அருளாளனும் பிழைபொறுக்க வேண்டுமப்பா அனைவர்க்கும் நல்லதையே நாடனுமப்பா அன்பான தாய்கூட மூவருமே அழகாக வாழனுமே சுவனத்திலே…! ஆமீன்  ஆமீன்  யாரப்பல் ஆலமீன்……..!!!                                           ...