மெட்டெடுத்துன் தேன்குரலால்
பாடுமெங்கள் *YBF* பாலா நீ...
தமிழ் சினிமா கீதம்தனை
மனம்நெகிழ மீட்டினாயே நீ..!
உன் குரலில் கீதம் கேட்டு
உள்ளம் உருகிப் போனேனே...
மறுமுறையும் ஒஸ்மானியா சென்று
மண்டியிட நெஞ்சம் துடித்ததுவே!
பசுமையான கல்லூரி நாட்கள்
பழகிப்பிரிந்த உயிர் நட்புக்கள்
பந்தயம் கட்டிய விளையாட்டுக்கள்
படித்து முடிக்காத கவிதை நூல்கள்...
படபடவென அனைத்தும் நினைவில்
பட்டாஸைப் போல் வெடித்ததுவே...
பரவசம் பொங்க நானும் இன்று
பறந்தேனே தரையில் நின்றுகொண்டு...!!!
- sironmany-
F M Rozaan

Comments
Post a Comment